பகிரங்க விவாதத்துக்கு வருமாறு சாகரவுக்கு கம்மன்பில அழைப்பு!
” எரிபொருள் விலை அதிகரிப்பானது அரசாங்கத்தின் முடிவாகும். அது என்னால் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு கிடையாது. நிதி அமைச்சின் அறிவிப்பையே நான் அறிவித்தேன்.
எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரையே சாகர காரியவசம் விமர்சித்துள்ளார். அவரின் அறிவிப்பு மொட்டு கட்சியின் முடிவு அல்ல என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆக, பதவி விலகவேண்டியது நானா, மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசமா? அவரை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.” என்றார் அமைச்சர் உதய கம்பம்பில