மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை தொடர்ந்து நீடிக்கும்!
பயணத் தடை நீக்கப்பட்டாலும், கட்டுப்பாடுகள் தொடரும்!
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை 14ஆம் திகதி தளர்த்தப்பட்டாலும், கொவிட் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இதில் முக்கியமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் தடைசெய்யப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.