இலங்கையில் ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள் பதிவானது

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, நேற்று மாத்திரம் 101 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த 10 நாட்களில் மாத்திரம் 527 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 11 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *