அமெரிக்காவில் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட இலங்கையர்!
கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் வெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
கலாநிதி கேப்ரியல் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று உள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து அவர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.