மனைவிமார்கள் 28 பேர் முன் 37ஆவது திருமணம் செய்த ஆசாமி!
தனது 28 மனைவிகள், மற்றும் 35 குழந்தைகள் முன் 37 ஆவது முறையாக திருமணம் செய்து கொண்ட நாகாலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே 36 முறை திருமணம் நடந்துள்ளது. இதில் 28 மனைவிகள் தற்போது உயிரோடு உள்ளனர். அவர்களுக்கு 35 குழந்தைகள் மற்றும் 126 பேரக்குழந்தைகள் உள்ளனர் .
இந்த நிலையில் 37 வது முறையாக தற்போது அந்த நபர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.
தனது 28 எட்டு மனைவிகள் 35 குழந்தைகள் 126 பேரக் குழந்தைகள் முன்னிலையில் அவர் புதிய பெண்ணுக்கு தாலி கட்டினார். இந்த திருமணத்தை அவரது குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடினர்.
இது குறித்த வீடியோவை நாகலாந்து சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது