13 இலட்சம் பேருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது!

கொவிட் வைரஸ் பரவலினால் தமது வாழ்வாதாரத்தை இழந்த 13 லட்சத்து 50 ஆயிரம் சமூர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கென ஆறாயிரத்து 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி, இன்று தொடக்கம் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள், சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *