கடல் உணவுகளை உட்கொள்ள முடியுமா?

கடல் உணவு உட்கொள்வதில் எவ்வித சிக்கல்களும் இல்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் தீப்பிடித்த எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இராசானப் பொருட்களும், அதிலிருந்த வேறு வகையான பொருட்களும் கடலில் கலந்துள்ளது. இதனையடுத்து கடல் உணவை உட்கொள்வதில் பொதுமக்களிடையே அச்சமும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

எனினும், இதுகுறித்து ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ள ஆரம்ப அறிக்கையில் நாரா நிறுவனம் கடல் உணவு உட்கொள்வதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *