சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 அதிகரிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 270,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக மூவர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 5 பேர் இதுவரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது