டுபாய் லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசை வென்ற இலங்கையர்!
டுபாயில் பணியாற்றும் இலங்கையர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசை வென்றுள்ளார்.
முதல் பரிசாக 15 மில்லியன் டிராம் பணத்தை நேற்று அவர் பெற்றுள்ளார்.
ரசிக்க Jds என அழைக்கப்படும் இலங்கையரே இந்த பணப்பரிசை வென்றுள்ளதாக அபுதாபி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிவில் பொறியியலாளராக பணியாற்றும் இலங்கையர் மேலும் 5 பேருடன் செல்லும் போது இந்த லொத்தர் சீட்டினை கொள்வனவு செய்துள்ளதாக வெற்றி பெற்ற பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த மாதம் பிக் டிக்கட் லொத்தர் சீட்டிழுப்பில் 12 மில்லியன் டிராமை இலங்கையர் ஒருவர் பெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.