நாளை முதல் ஊரடங்கு தளர்வு!
கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் நிலை (Level) ஒன்றிற்கு என்ற அளவில் கட்டுக்குள் வந்துள்ள 18 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2-வது அலை கொரோனா முதலில் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில்தான் வீசத் தொடங்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இருந்தது. எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ, அந்த அளவிற்கு தற்போது வேகமாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் தளர்வுகள் வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளளது. கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தின் நிலை (Level) ஒன்றிற்கு என்ற அளவில் கட்டுக்குள் வந்துள்ள 18 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு தளர்த்தப்பட்டும். மும்பையில் இன்னும் 2-ம் நிலையில்தான் உள்ளது. ஒன்றிற்கு வரும்போது புறநகர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என அம்மாநில அமைச்சர் விஜய் வதேத்திவார் தெரிவித்துள்ளார்.