வுஹான் போல் மாறும் சீனாவின் குவாங்டாங் 2481 பேருக்கு கொரோனா!
தென் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குவாங்டாங் மாகாண சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
இதில் ஏழு உள்நாட்டவர்களும் மூன்று வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
நேற்றைய நிலவரப்படி, குவாங்டாங் மாகாணத்தில் மொத்தமாக 2,481 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் வெளிநாட்டிலிருந்து வந்த 1,038 பேர் அடங்குவர்.
குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சோவில் 6 மணி நேரத்திற்குள் 1,000 சதுர மீட்டர் COVID-19 சோதனை நிலையமும் கட்டப்பட்டது.