பயணக்கட்டுப்பாட்டினை நீக்க முடியாத நிலை ஏற்படலாம்!

பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறும் நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபடுவது மிகுந்த வருத்தத்துக்கு உரிய விடயம் என,  இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்தால், பயணக்கட்டுப்பாட்டினை நீக்க முடியாத நிலை ஏற்படலாம் என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக 7 ஆம் திகதி நாட்டை மீண்டும் திறக்க முடியுமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *