நாய்கள் மூலம் பரவும் புதிய வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது!

மலேசியாவில் நாய்களிடமிருந்து பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்: அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்!
உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக தீவிரமடைந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த கொரோனா இரண்டாம் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்த நிலையில் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் நாய் களிடமிருந்து மனிதனுக்கு பரவுவதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கொரோனாவின் இரண்டாம் அலையில் இருந்து மீளாத மக்களுக்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது அதிர்ச்சியாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *