இலங்கையில் கொரோனா தொற்று 1இலட்சத்தி 60 ஆயிரத்தை தாண்டியது!
நாட்டில் இன்று இதுவரையில் 2,906 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இதுவரையில் 161,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,635 பேர் இன்று (22) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126,995 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,132 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.