திங்கள் முதல் எவ்வித தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு!

தமிழகத்தில் ஒருவார காலத்துக்கு முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மறுநாள் முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இன்றிரவு 9 மணி வரை ஞாயிறு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு திங்கட்கிழமை காலை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு தனியார் பேருந்துக்கள் இயக்க அனுமதி அளக்கப்பட்டுள்ளது. மருந்தகம், நாட்டு மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளருது. உணவகங்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 வரை பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *