கருப்பு பூஞ்சை நோயை கண்டறிவது எப்படி?

கொரோனா பரவும் நேரத்தில் புதிதாக கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. இதனால் தேவையற்ற பயமோ, பதற்றமோ வேண்டாம்.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 9 பேரும் நலமுடன் உள்ளனர் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

கருப்புப் பூஞ்சைக்கு முகம், கண் கீழ் பகுதியில் வீக்கம், மூக்கடைப்பு, எலும்புகளில் புண் உள்ளிட்டவை அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டோருக்கு மூக்கு, கண் பகுதியில் (CT – PNS) சிடி-பிஎன்எஸ் ஸ்கேன், அல்லது முகம் முழுவதும் (MRI) எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கருப்பு பூஞ்சை தொற்று எந்த கட்டத்தில் உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இதனை தொற்று நோயாகவும் அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *