வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரவுள்ள பயணிகளுக்கு தடை!
இலங்கையில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா நிலைமையை அடுத்து எதிர்வரும் மே 21ஆம் திகதி இரவு 11.59 மணி தொடக்கம் மே 31 இரவு 11.59 மணிவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரவுள்ள பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் வழமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.