நீண்ட நேரம் வேலை செய்வதால் மரணங்கள் அதிகரிப்பு அதிர்ச்சி தகவல்!

நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் ஆண்டுக்கு உலகில் பல்லாயிரம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

முதல் முறையாக சர்வதேச அளவில் இது போன்ற ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதில் நீண்ட நேரம் வேலைப் பார்ப்பதால் மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தால் 2016ஆம் ஆண்டு 745,000 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று இந்த போக்கை மோசமடையச் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வாரத்தில் 35 முதல் 40 மணி நேரம் வரை வேலை பார்ப்பதுடன் ஒப்பிடுகையில் வாரத்தில் 55 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்ப்பதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *