உடன் அமுலாகும் வகையில் சில பகுதிகள் முடக்கம்!
நாட்டில் 2 மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் துனுகலபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபுகொட கிராம சேவகர் பிரிவின் செபஸ்தியன் வீதியும், பிட்டிபன லெல்லம (வடக்கு பிட்டிபன) கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குனகொலபெலஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டே கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.