22 ஆயிரம் பணியாட்கள் 24 வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்ட தாஜ்மஹால்!

மனிதனால் படைக்கப்பட்டதும் இயற்கையான முறையில் உருவானதுமான கலைபடைப்புக்களே இன்று உலக அதிசயமாக சித்தரிக்கப்படுகிறது.

இன்று உலகில் காதலர்களின் அடையாள சின்னமாகவும் உலக அதிசயங்களில் ஒன்றாக காணப்படும் தாஜ்மகால் 22000 கைகளை இழக்க செய்தது என இதுவரைக்கும் யாருக்குத் தெரியும்?

முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில்ய முனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது.

ஏழு உலக அதிசயங்களின் பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது முகலாய மன்னனான ஷாஜகனால்,

இறந்து போன அவனது மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 24 வருடங்களுக்குள் இடையில் கட்டிமுடிக்கப்பட்டது ஷாஜகானின் 3வது மனைவி மும்தாஜ் தான் பெற்ற 14வது மகனின் இறப்பால் மனமுடைந்து தானும் இறந்து விட்டதாலும் இறந்த தன் மனைவியின் நினைவாகவே தாஜ்மகாலை கட்டியதாக பழங்கதைகள் கூறப்படுகின்றது இதன் கட்டிட வேலைகள் மிக வித்தியாசமானதாகவும் வினோதமானதாகவும் காணப்படுகிறது…

தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கைலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான , ஷா ஜகான் கட்டுவித்த, ஜமா மஸ்ஜித் ஆகி இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன.

ஷாஜகான் கட்டுமான பணிகளுக்காக வெண்ணிறச் சலவைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.

காதல் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்த ஷாஜகானால் மனித வலிகளின் உணர்வுக்கு கொடுக்க முடியவில்லை.

இந்த படைப்பை போல வேறு ஒன்று உருவாகிவிடக்கூடாது என எண்ணி கட்டிட வேலையில் ஈடுபட்ட வேலையாட்களின் கைகளை வெட்டி விட்டததாக ஒரு கதை காணப்படுகிறது.

தனது மனைவிக்காக உருவாக்கப்பட்ட இந்த பளிங்கு மாளிகையின் அழகுக்குப் பின்னால் எத்தனை பேரது அழுகைகளும் எத்தனை குடும்பங்களின் சாபங்களும் இருக்கும் நினைத்துப் பார்த்தாலே கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *