வைத்தியசாலையில் 05 வைத்தியர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா!
மாரவில ஆதார வைத்தியசாலையின் 20 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இடையில் 5 வைத்தியர்கள் மற்றும் 08 தாதியர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 5 வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்களும் மற்றும் 2 குடும்ப நல ஊழியர்களும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது