கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க இதை செய்து பாருங்கள்!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் சுவாமிநாதன் எளிமையான வழிமுறைகளை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:காலையில் இஞ்சி, மஞ்சள் தலா ஒரு துண்டு, ஒரு வெற்றிலை ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து 50 மில்லியாக வற்றச் செய்து குடிக்கலாம். இது உடலில் பரவியுள்ள வைரஸ் சுவரை உடைக்கும்.

காலை 11:00 மணிக்கு முருங்கை கீரை மற்றும் அதன் குச்சிகளை போட்டு சூப் அல்லது ரசம் வைத்து குடிக்க வேண்டும். இது உடலில் உள்ள புரோட்டீனை எடுக்க விடாமல் வைரசை தடுக்கும். இதனால் வைரஸ் பெருக்கம் குறையும்.

மாலை 4:00 மணிக்கு கபசுர குடிநீர் குடிக்கலாம். இரவு 7:00 மணிக்கு கிராம்பு, பட்டை, ஏலக்காய் தலா ஒன்று, ஓமம் கால் ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைத்து, கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். இதில், லவங்க பட்டை, ரத்தத்தை உறைய விடாமல் தடுக்கும். இதன்மூலம் கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *