இலங்கையில் ஒரே நாளில் அதிகப்படியான 26 கொரோனா மரணங்கள் பதிவானது!
இலங்கையில் ஒரே நாளில் 26 கொரோனா மரணங்கள் பதிவானது நேற்றைய தினத்தில் 2,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் (10) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 827 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது