இன்று முதல் மே 30 வரை மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை!
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு இன்று நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மே 30 திகதிவரை இத்தடை அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, சுகாதார தரப்பு உட்பட அனைத்து தரப்புகளுடனும் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் பிரகாரம் ஜனாதிபதி குறித்த முடிவை எடுத்துள்ளார்.
அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும், கலந்துரையாடல்களையும் இரத்து செய்வதற்கும், வர்த்த நிலையங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் தங்கியிருக்க கூடியவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கும், தொற்றாளர்கள் அதிகம் அடையாளம் காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களின் அன்றாட வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.