இலங்கையில் இன்று 22 கொரோனா மரணங்கள் பதிவானது!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளன.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 786 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 123,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,335 பேர் இன்று (08) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 103,098 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *