இந்தியாவில் ஒரே நாளில் 4 இலட்சம் பேருக்கு கொரோனா 4187 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,187 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

  • புதிதாக 4,01,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,18,92,676 ஆக உயர்ந்தது.
  • புதிதாக 4,187 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்துள்ளது.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,18,609 பேர் குணமடைந்துள்ளனர்.
  • இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  1,79,30,960 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  37,23,446 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.98% ஆக அதிகரித்துள்ளது.
  • கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.
  • கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 17.01% ஆக அதிகரித்துள்ளது.
  • இதன் மூலம், நாட்டின் இதுவரை 16,73,46,544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *