இளநரையை தடுக்க எளிய முறைகள்!

இன்றைய தலைமுறையினர்கள் பெரும்பாலும், இளநரை முதி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு, பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமாக உணவு முறைகள் தான் பெரும்பலான காரணங்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், இளநரையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிய முறையில் உரிய பராமரிப்பின் மூலம் வராமல் தடுக்கலாம். வாரம் ஒருமுறை இல்லையென்றாலும் மாதம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

இதனால், ஊட்டம் கிடைக்கப்பெறுவதால் இளநரையின் தாக்கம் இருக்காது. சீயக்காயை நேரடியாக கடைகளில் வாங்கி சரிபாதியாக வெந்தயம் கலந்து செம்பருத்தி பூ செம்பருத்தி இலை, கறிவேப்பிலை,

மருதாணி இலை ஆகியவற்றைக் காய வைத்து சேர்த்து அரைத்து சாதம் வடித்த கஞ்சியில் கரைத்து தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால் ஒரே மாதத் தில் இளநரையின் நிறம் மாறத்தொடங்கும்.

மேலும், வேறு எந்தவித காரணங்களால் இளநரை ஏற்படும், அதற்கு சரியான தீர்வு தான் என்ன என குறிப்பிட்ட காணொளியின் மூலம் கண்டு தெரிந்துகொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *