இந்தியாவுக்கு சென்றவர்கள் இலங்கைக்குள் நுழைய தடை!

கடந்த 14 நாட்களுக்குள் இந்தியா சென்ற எந்த ஒரு பயணியையும் மீண்டும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து விமான சேவைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *