இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

நாட்டில் இன்றைய தினத்தில் மாத்திரம் 1,939 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 117,529 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று (05) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 720 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *