இலங்கையில் ஒரே நாளில் 1923 பேருக்கு கொரோனா 13 பேர் உயிரிழப்பு!

இன்றைய தினத்தில் மாத்திரம் 1,923 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, நாளொன்றுக்கு பதிவான அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 113,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 98,209 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், இன்றைய தினத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மொத்தம் 709 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *