இறுதி கிரியைகள் 24 மணிநேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும்!
கொரோனா வைரஸ் தொற்று அல்லாமல் இதர காரணங்களால் உயிரிழப்பவர்களுக்கான இறுதிக்கிரியைகளையும் 24 மணிநேரத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வழிகாட்டல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகளில் 25 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.
நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.