இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா ஒரே நாளில் 4 இலட்சம் பேர் பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.92 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.20 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 152,002,365 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 129,271,047 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 லட்சத்து 93 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 19,537,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,365 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
*அமெரிக்காவில் 59,906 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 784 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
*பிரேசிலில் ஒரே நாளில் 73,076 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,870 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
*இந்தியாவிலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உச்சபட்ச அளவாக 402,110 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 3,522 பேர் உயிரிழந்துள்ளனர்….