திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடை!
திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விதமான நிகழ்வுகளையும் நடத்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரண்டு வார காலத்திற்கு நிகழ்வுகளை நடத்த தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.