உலகை உலுக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு 15 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.02 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 15,02,16,575 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12,77,36,178 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 லட்சத்து 63 ஆயிரத்து 873 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 19,316,524 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 111,779 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மெக்சிகோவில் 3,818 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 371 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கொரியாவில் ஒரே நாளில் 678 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *