இரு வாரங்களுக்கு அனைத்து அரச மற்றும் தனியார் விழாக்களை நடத்துவதற்கு தடை!

இன்று (25. 04. 2021) முதல், எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில், நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேபோன்று – எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில், நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் தனியார்துறையின் அனைத்து விழாக்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் நிகழ்வுகளையும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் கீழ் நிறுத்திவிடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *