இலங்கையில் உள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் வக்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொவிட் 19 செய­லணி மற்றும் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­களை நோன்பு முடி­யும்­வரை மூடி­வி­டு­வ­தற்கு வக்பு சபை தீர்­மா­னித்­துள்­ளது.

நாட்டின் பல பகு­தி­களில் அநே­க­மான பள்ளி வாசல்களில் கொவிட் 19 தொடர்­பான சுகா­தார வழி­காட்­டல்கள் மீறப்­ப­டு­வ­தா­கவும் பெரும் எண்­ணிக்­கையானோர் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் சுகா­தார வழி­காட்­டல்­களை அசட்டை செய்­வ­தாக வக்பு சபைக்கு ஆதா­ரங்­க­ளுடன் முறை­பா­டு­களை முன்­வைத்­தி­ருப்­ப­த­னாலே இவ்­வா­றான தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொள்ள வேண்­டி­யேற்­பட்­டுள்­ள­தாக வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

நாட்டில் மீண்டும் கொவிட் 19 தொற்­றுநோய் பரவல் உரு­வாகும் சாத்­தியம் உரு­வா­கி­யி­ருப்­ப­தாக சுக­தார அமைச்சு எச்­ச­ரித்­தி­ருக்­கின்ற நிலையில் குரு­நாகல் மாவட்­டத்தில் இரண்டு முஸ்லிம் கிரா­மங்கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் மேலும் தெரி­விக்­கையில் “அண்­மையில் சுகா­தார அமைச்சு நோன்பு காலத்தில் பள்­ளி­வா­சல்­களில் சுகா­தார வழி­காட்­டல்கள் தொடர்பில் சுற்­றிக்­கை­யொன்­றி­னை வெளி­யிட்­டி­ருந்­தது.

அவ்­வ­றிக்­கையில் பள்­ளி­வா­சல்­களில் ஜமாஅத் தொழு­கை­களில் 100 பேருக்கு உட்­பட்­ட­வர்­களே தொழ முடியும். ஒவ்­வொ­ரு­வரும் வீட்­டி­லி­ருந்து முஸல்­லாக்­களை எடுத்து வர வேண்டும். வீடு­க­ளிலே வுழூச் செய்து வர­வேண்டும். ஒவ்­வொ­ரு­வரும் மாஸ்க் அணிந்­தி­ருக்­க­வேண்டும்.ஒரு மீற்றர் இடை­வெளி பேணப்­ப­ட­வேண்டும். பள்­ளி­வா­ச­லுக்குள் நுழையும் ஒவ்­வொ­ரு­வ­ரதும் உடல் உஷ்ண நிலை சோதிக்­கப்­ப­ட­வேண்டும் என்பன உட்­பட பல நிபந்­த­னைகள் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தன. ஆனால் இவை­களில் எவையும் பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை என வக்பு சபைக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.

கஞ்சி விவ­கா­ரமும் சுற்­ற­றிக்­கை­யின்­படி பேணப்­ப­டு­வ­தில்லை என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. கஞ்சி பள்­ளி­வா­ச­லுக்கு வெளியே வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென சுற்­ற­றிக்­கையில் தெரி­விக்கப்பட்டுள்ளது. இவ்­வி­வ­கா­ரமும் பின்­பற்­றப்­ப­டாது அலட்­சியம் செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்­கான ஆதா­ரங்கள் புகைப்­ப­டங்கள் மூலம் வக்பு சபைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் நாட்டில் கொவிட் 19 மூன்­றா­வது அலை உரு­வாக முஸ்லிம் சமூகம் கார­ண­மாக இருந்­தது என்ற குற்­றச்­சாட்டு எம்­மீது சுமத்­தப்­ப­டலாம். அதனால் பள்­ளி­வா­சல்கள் நோன்பு காலத்தில் வழங்­கப்­பட்­டுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களை முழு­மை­யாக கண்­டிப்­பாக பின்­பற்­ற­வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *