கியூபா மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியின் ரகசியம்!

கியூபா உலக அரங்கில் கவனிக்கப்படுகின்றது, அவர்களை உற்று நோக்கும் உலகம் ஒரு உண்மையினைச் சொல்கின்றது, அது நமக்கு அவசியமானது

1.5 கோடி மக்கள் தொகை கொண்ட கியூபாவில் கொரோனா 2 ஆயிரம் பேரைத் தாக்கியது. வெறும் 84 பேரைத் தவிர இதர மக்கள் பிழைத்தெழுந்தார்கள். கொரோனா இல்லா நிலை நோக்கி கியூபா வேகமாக சென்று கொண்டிருக்கின்றது.

இது எப்படி சாத்தியமாயிற்று என்றால், அவர்கள் மருத்துவம் மேற்கு உலகம் சார்ந்ததல்ல கிழக்கு உலகம் மற்றும் மூலிகை சார்ந்தது.

காஸ்ட்ரோவும் மருத்துவனும் போராளியுமான சேகுவாரேவும் அன்றே செய்த ஏற்பாடு அது. சேவுக்கு பின் காஸ்ட்ரோ அதை செவ்வனே செய்தார். எல்லா மூலிகைகளையும் கியூபாவுக்கு கொண்டு சென்றார். வேப்பமரங்கள் ஏராளம்.
இந்நிலையிலும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்க, பெரும் ஆய்வுகளைச் செய்ய உத்தரவிட்டார். அப்பொழுது ஒருவித வயிற்றுபோக்கு நோய் ஏற்பட்டு கியூபாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது

காஸ்ட்ரோவுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கை, “நோய் எதிர்ப்பு சக்திக்கு முருங்கை மரத்து காயும் இலையும் மருந்து“ எனவும் அந்தவகை முருங்கை இந்தியாவில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் வந்த கியூபா குழு அவ்வகை முருங்கைகளைக் கியூபாவுக்குக் கொண்டு சென்றது, பெரும் பண்ணைகள் அமைக்கப்பட்டன, முருங்கை இலை நேரடியாகவும், இலை காயவைத்து பொடிசெய்தும் கொடுக்கப்பட்டன‌.

கியூபா மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. அதன் பின் பெரும் நோய்கள் இல்லை.

இப்பொழுது கொரோனா காலத்திலும் உலகம் அதை மறுபடியும் உணர்கின்றது.
ஆம், கொரோனா என்பது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதோரை மட்டும் குறிவைத்து தாக்கும் நோய்.

அறுவை சிகிச்சை, நீரிழிவு என சிக்கிய நோயாளிகள் தின்னும் மாத்திரை கூடுதலாக ஆண்டிபயாட்டிக் இம்சைகள் அவர்கள் உடலை வலுவற்றதாக ஆக்குகின்றது.

இதனால் அவர்கள் எளிதில் மரணமடைகின்றார்கள் என்பதுதான் விஷயம். நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெருகியிருக்கும் உடலில் கொரோனாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி மிக்க முருங்கை மிக எளிதான வகையில் தமிழகத்திலே கிடைக்கின்றது.

ஆனால் அதே தமிழகம் அதை உண்ணாமல் காபி, டீ, கொக்க கோலா, பரோட்டா என எதிலெல்லாமோ சிக்கி தன் ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றது.
தமிழர்களும் இந்தியர்களும் கியூபாவிடம் இருந்து பாடம் கற்பது நல்லது.

ஆம், கியூபாவின் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய பங்காற்றும் முருங்கை கீரை உங்கள் காலடியிலே கிடக்கின்றது, அதை விடாதீர்கள்.

இன்னொரு விஷயமும் சொல்கின்றார்கள். நுரையீரல் பலம் இழந்திருப்பவர்களைக் கொரோனா எளிதில் தாக்கும் அதற்கு மிகப்பெரும் நிவாரணம் அகத்திக்கீரை.
ஆம். அகத்திக்கீரை நுரையீரலை வலிமையாக்கும்.

இந்த இரு கீரைகளும் இப்போதைக்கு அவசியமானவை. தமிழர்கள் 7 நாளும் 7 வகை கீரைகளை நாளுக்கு ஒன்றாக சேர்த்தார்கள் என்கின்றது பழம் உணவு முறை.

அது உண்ணும் வரை ஆரோக்கியமாக இருந்தார்கள். பெரும் அணை கட்டவும் கல்தூண்களை அனாசயமாக சுமக்கவும் அவர்களுக்கு வலு இருந்தது.

இப்பொழுது கொரோனா காலம் எவ்வளவோ விஷயங்களைக் கற்று கொடுக்கின்றது. அது பழந்தமிழரின் மருத்துவ உணவாக இருந்த கீரைகளின் அவசியத்தைச் சொல்கின்றது.

இந்தியாவில் சர்வ சாதாரணமாக காணப்படும் விஷயம் முருங்கைக் கீரை, அகத்திக் கீரை.

ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது இதை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ருசிக்காக இல்லாமல் மருந்துக்காக சேருங்கள். இன்றிலிருந்தாவது தொடங்குங்கள்.

கொரோனா நம் பக்கமே வராது.

குடிக்காதீர்கள், புகை பிடிக்காதீர்கள் இவை நுரையீரலைக் கெடுக்கும்.

நாக்குக்கு அடிமையாகி கண்டதையும் உண்ணாதீர்கள். குறிப்பாக முன்பே சமைத்த உணவினை உண்ணாதீர்கள். பேக் அயிட்டம் எனப்படும் உணவுகளை உண்டால் உடல் கெடும் என்பதே கொரோனா சொல்லும் செய்தி.

பேக் அயிட்டம் என்றால் அன்றாடம் சமைக்காப் பொருள் என அர்த்தம்.

ஆம். அன்றாடம் சமைத்த உணவே ஆரோக்கியம் காக்கும் என்கின்றனர் தமிழக சித்தர்கள்.

இப்போது உலகம் சொல்லும் செய்தி, நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தாக்காது. அந்தச் சக்தியினை கூட்டும் விஷயம் முருங்கையில் மிகுந்துள்ளது. அகத்திக் கீரையில் வயிறு நுரையீரல் பாதுகாப்பும் உண்டு.

இது போக அருகம்புல்லையும் சொல்கின்றார்கள். அருகம்புல் சாறு ரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்கும். ரத்தம் சுத்தமான உடலில் ஒரு நோயும் தாக்காது.
நம் கீரையின் மகத்துவத்தை நம்மை விட கியூபர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இன்றுவரை போதை மருந்து இல்லா பூமி அது. கூடவே முருங்கையினை போற்றும் மண் அது.

கீரைகளை நிறைய சேருங்கள், முருங்கையினைத் தவிர்க்காதீர்கள், உண்டபின் ஒரு துண்டு கசப்போடு அது வேப்பம்பூ துவையலோ இல்லை பாகற்காய் துண்டோ அதோடு உணவினை முடியுங்கள், ஒரு நோயும் அண்டாது.

ஆரோக்கியம் என்பது தமிழருக்கு அவர்கள் வீட்டின் முன்பும் பின்பும் வேப்பிலை மற்றும் முருங்கையாக நிற்கின்றது, அதுபோக கீரையாகவும் அருகம்புல்லாகவும் தரையில் கிடக்கின்றது.

அதை கண்டெடுங்கள் போதும். வீணான மருத்துவ செலவும் இதர கலக்கங்களும் உங்களை அண்டாது, உலகுக்கே வழிகாட்டுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *