இஸ்ரேல் கொரோனாவை எப்படி கடந்தது?

உலக அளவில் பல நாடுகள் கொரோனா இரண்டாவது அலைக்கு முன் திணறிக் கொண்டிருக்கின்றன.

இதில் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது இஸ்ரேல்.

“இனி பொதுவெளியில் முகக் கவசம் அணிய வேண்டியதில்லை” என்று இஸ்ரேல் அரசு அறிவித்திருப்பதை வரவேற்றிருக்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

அந்த அளவுக்கு என்ன மாற்றம் அங்கு நடந்திருக்கிறது?

தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்திருக்கிறார்கள். இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்களுக்கு சிறப்பான கிரீன் கார்டு கொடுக்கிறார்கள்.

அந்தக் கார்டு இருந்தால் தான் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் ஒருவர் நுழைய முடியும். உள்ளரங்குகளில் மட்டும் முகக்கவசம் அணிவதை வற்புறுத்துகிறார்கள்.

அவ்வளவு தான் நிபந்தனை.

இஸ்ரேலில் ஐம்பது சதவிகிதமானவர்களுக்கு மேல் ‘கிரீன் கார்டு’ வாங்கி விட்டார்கள். உடனே அரசும் பொது இடங்களில் முகக்கவசம் என்ற நிபந்தனையைத் தளர்த்தி விட்டது.

கொரோனாவை எப்படியெல்லாம் ஒற்றுமையுடன் கடந்து வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *