இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா!
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் சினிமாத்துறையினர், அரசியல்வாதிகள் என பலதுறைகளின் பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னாதாக, “கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம்” என்றுக்கூறி 5 யோசனைகளை தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.