சோம்பேறிகளை தீவிரமாக தாக்கும் கொரோனா!
சீனாவில் இருந்து பரவிய கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவினை நேற்று வெளியிட்டது. இந்த ஆய்வில் சுமார் 50 ஆயிரம் கொரோனா நோயாளிகள் பங்கேற்றனர். அந்த நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி சோம்பலாக இருப்பவர்களை கொரோனா பாதித்தால் அது அவர்களைத் தீவிரமான நிலைக்கு இழுத்துச் செல்கிறது என்பது தெரியவந்துள்ளது.