இந்தியாவில் ஒரே நாளில் ஒரு இலட்சம் பேருக்கு கொரோனா!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.65 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 1.25 கோடியை  தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,03,558  பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,25,89,067 ஆக உயர்ந்தது.

* புதிதாக 478 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,65,101 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 52,847 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,16,82,136 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,41,830 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 92.80% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.31% ஆக அதிகரித்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.89% ஆக அதிகரித்துள்ளது.

* இதுவரை இந்தியாவில்  7,91,05,163 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,38,464 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *