13 வயது மாணவனுடன் திருமணம் செய்து முதலிரவு முடிந்தவுடன் விவாகரத்து செய்த 36 வயது ஆசிரியை!

இந்தியாவில் தலைவிரித்தாடும் மூட நம்பிக்கைகளுக்கு அப்பாவி குழந்தைகள் இரையாகிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. மந்திர தந்திரங்கள், பூஜைகள்,தோஷங்கள் என ஏதாவது ஒன்றால் குழந்தைகள் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 13 வயது சிறுவனுக்கும் 36 பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து முதலிரவு கொண்டாடிய சம்பவம் ஒன்று பஞ்சாப்பில் இடம்பெற்றுள்ளது.

பஞ்சாபில் ஜலந்தூர் மாவட்டத்திலுள்ள பாஸ்தி பாவா கேல் பகுதியில் 36 வயது ஆசிரியர் ஒருவர்
டியூஷன் நடத்திவருபவர் ஸ்வேதா ( பெயர் மாற்றப் பட்டுள்ளது ). 36 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை என பெற்றோர் ஜோதிடம் ஒருவரை சந்தித்துள்ளனர். ஸ்வேதாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடம் திருமணம் ஆக வேண்டுமானால் ஜாதகத்தில் இருக்கும் மாங்கல்ய தோஷத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்றும் அதற்கான பரிகாரத்தையும் கூறியுள்ளார்

அதாவது ஸ்வேதாவிற்கு இளம் கன்னித்தன்மையுடன் இருக்கும் ஆண் ஒருவருடன் திருமணமாகி முதலிரவும் நடக்க வேண்டும் என்றும் பின்னர் தாலியை அறுத்து விடவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தன்னிடம் டியூசன் வந்த சிறுவன் தான் சரி என ஸ்வேதா கூற பெற்றோரும் சம்மதித்துள்ளனர்.

குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்ற ஸ்வேதா உங்கள் மகனுக்கு நிறைய பாடம் சொல்லி கொடுக்க இருக்கிறது, ஒரு வாரம் வீட்டில் தங்கி இருந்து படிக்கட்டும் என கூற சிறுவனின் பெற்றோரும் சம்மதித்துள்ளனர். இந்த நிலையில் அவசர அவசரமாக வீட்டில் திருமண ஏற்பாடுகளை செய்த குடும்பத்தினர் மெஹெந்தி, சங்கீத், என திருமணத்தில் இருக்கும் அத்தனை சடங்குகளையும் செய்தி சிறுவனை தாலியும் கட்ட வைத்துள்ளனர்.

அதன் பின் வழமை போல் முதலிரவையும் ஏற்பாடு செய்து 13 வயது சிறுவனுக்கும் 36 வயது பெண்ணுக்கும் முதலிரவு சடங்கையும் முடித்துள்ளனர். பின்னர் சிறுவனை வீட்டுக்கு மிரட்டி அனுப்பியுள்ளனர். ஆனால் வீட்டிற்கு சென்ற சிறுவன் தனக்கு திருமணம் நடந்ததையும், மற்றும் முதலிரவு சடங்குகள் நடந்ததையும் கூறியுள்ளார்.

உடனடியாக பொலிசுக்கு சென்ற பெற்றோர் குறித்த டீச்சர் மீது புகார் கொடுத்த போது தனது மகளுக்கு திருமணம் நடந்தது, இன்று தாலி அறுத்துவிட்டார்கள், அவள் விதவை அதனால் பொலீஸுக்கு வர முடியாது என டீச்சரின் பெற்றோர் கூறியுள்ளனர்.

அது மட்டும் இன்றி மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று தான் இப்படி செய்தோம், மாங்கல்ய தோஷம். நீங்கிவிட்டது, மன்னித்து விடுங்கள் என சிறுவனின் பெற்றோரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் புகாரை வாபஸ் வாங்கி உள்ளனர். இதனை பலரும் கண்டித்து வருகின்றனர்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *