மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடுகளில் இலங்கைக்கு 129 இந்தியாவுக்கு 139 ஆவது இடம்!

ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு குறித்து நடத்திய ஆய்வில் இலங்கைக்கு 129 ஆவது இடமும் இந்தியாவுக்கு 139-வது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (UNSDSN) என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக 2018ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை நடத்தியது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 149 நாடுகள் இந்த ஆய்வில் பங்கேற்றிருந்த நிலையில் பின்லாந்து நாட்டு மக்கள் தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தை தொடர்ந்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன.

இதுகுறித்து அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 149 நாடுகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நாட்டு மக்களின் மகிழ்ச்சியான சூழல், ஜிடிபி நிலவரம், சமூகசூழல், ஆதரவு, தனிநபர் சுதந்திரம், ஊழல் ஆகியவை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களை எப்படி மகிழ்ச்சியாக உணர்கிறார்கள் என்பதை வைத்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இரு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. முதலாவதாக கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும், இரண்டாவதாக கொரோனா பெருந்தொற்றை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் எவ்வாறு போராடினார்கள் என்பதை மதிப்பிட்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை மக்களிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆய்வு நடத்தினோம். ஆனால், தொலப்பேசி மூலம் பலரும் பதில் அளிக்கவில்லை. கடந்த 2019ம் ஆண்டு பலரும் ஆர்வத்துடன் தொலைபேசியில் பதில் அளித்தார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் நார்டிக் நாடுகள்தான் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. தொடர்ந்து 4-வது ஆண்டாக ஃபின்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து டென்மார்க், 3-வதாக ஸ்விட்சர்லாந்தும், 4வதாக ஐஸ்லாந்தும், 5வதாக நெதர்லாந்தும் பிடித்துள்ளன. 6-வது இடத்தில் நார்வே, 7-வது இடத்தில் ஸ்வீடன், 8-வது இடத்தில் லக்ஸம்பர்க், 9வது இடத்தில் நியூஸிலாந்து, 10-வது இடத்தில் ஆஸ்திரியாவும் பிடித்துள்ளன.

11-வது இடத்தை ஆஸ்திரேலியாவும் 12-வது இடத்தை இஸ்ரேலும் பிடித்துள்ளன. உலகின் பணக்கார நாடான அமெரி்க்கா 19-வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான கனடா 14-வது இடத்தில் உள்ளது. பிரிட்டன் 13-வது இடத்திலிருந்து 17-வது இடத்துக்கு பின்தங்கியது. 13-வது இடத்தில் ஜெர்மனியும், 15-வது இடத்தில் அயர்லாந்தும் 16-வது இடத்தில் கோஸ்டா ரிகாவும், 17-வது இடத்தில் பெல்ஜியமும், 18-வது இடத்தில் செக் குடியரசும், 20-வது இடத்தில் பெல்ஜியமும் இடம் பெற்றுள்ளன. பிரான்ஸ் 21-வது இடத்திலும், 22-வது இடத்தில் பஹ்ரைனும், 23-வது இடத்தில் மால்டா, 24-வது இடத்தில் தைவான், 25-வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் நாடும் உள்ளன.

கடந்த ஆண்டு சீனா 94-வது இடத்தில் இருந்த நிலையில் வியக்கத்தக்க வகையில் 84-வதுஇடத்துக்கு உயர்ந்துள்ளது. ஆசியா குறித்து ஆய்வாளர்கள் தீவிரமாக ஆய்வு செய்தபோது, சீனா கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த தீவிரமான முயற்சிகள், எதிர்மறையான பொருளாதார பாதிப்புகள் வருவதைக் குறைத்தல் போன்றவற்றை சிறப்பாகச் செய்ததால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆசியா-பிசிபிக் கண்டத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா 12வதுஇடத்திலும், நியூஸிலாந்து 9-வதுஇடத்திலும் உள்ளன. அரசு எடுக்கும் நடவடிக்கையில் மக்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், மகிழ்ச்சி அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

149 நாடுகளில் இந்தியா 139-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா 140 வது இடத்தில் இருந்தது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 105வது இடத்திலும், வங்கதேசம் 101-வது இடத்திலும், இலங்கை 129-வது இடத்திலும் சீனா 84-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளன. ஜிம்பாப்வே 148வது இடம், ருவாண்டா 147, போட்ஸ்வானா 146, லிசோதா 145-வது இடத்திலும் உள்ளன. ஏமன் 141-வது இடத்திலும், தான்சானியா 142 இடத்திலும் உள்ளன. மிகவும் மோசமாக ஆப்கானிஸ்தான் பட்டியலில் கடைசியாக 149-வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *