மொட்டு கட்சியில் இருந்து வெளியேற தயாராகும் சுதந்திரக் கட்சி

அரசிலிருந்து வெளியேறுமாறு மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனை செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே இருகின்றது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த பொதுத்தேர்தலின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தோற்கடிப்பதற்கு திட்டம் வகுத்தனர்.சிலர் கழுகு என்றுகூட எம்மையும் கட்சியையும் விமர்சித்தனர். இனிமேல் கிராம மக்கள் வழங்கும் தீர்ப்பின் – கோரிக்கையின் பிரகாரமே எமது தீர்மானம் அமையும்.

பதவிகளை துறக்குமாறோ அல்லது வெளியேறுமாறோ மக்கள் கோரிக்கை விடுப்பார்களாயின் அதனை ஏற்று செயற்படுவோம்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *