சீனி இறக்குமதியினால் ஏற்பட்ட பாரிய மோசடியை தடுக்கவே புர்கா தடை!
சீனி இறக்குமதியினால் ஏற்பட்ட மோசடியை தடுக்கவே புர்கா தடை கொண்டுவரப்பட உள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடியைப் போன்றே சீனி இறக்குமதி ஊடாகவும், பாரியளவில் மோசடி இடம்பெற்றுள்ளது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று 14- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.