ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யார்?
21/4 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியென ரி.ஐ.டியினரால் அடையாளம் காணப்பட்டுள்ள மொஹமட் இப்ராஹிம், மொஹமட் நௌப்பருடன் தொடர்பை பேணிய அரசியல் வாதிகளை கண்டறியவதற்கான விசேட விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
புலனாய்புப்பிரிவினர் மற்றும் ரி.ஐ.டியினர் ஆகியோராலேயே இவ்விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
மொஹமட் நௌப்பவர் என்பவர் நீண்டகாலமாக கட்டாரில் இருந்துள்ளார்.இதன்போது இலங்கை உட்பட இதர நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுள் யார், யார் இவருடன் தொடர்பை பேணியுள்ளனர் என்பதை கண்டறிவதே இதன் நோக்கம்.
2016 ஆம் ஆண்டு முதலே நௌப்பருடன், சஹ்ரானுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அன்று முதல் 21/4 தாக்குதல் இடம்பெறும்வரை சஹ்ரானை கருத்தியல் ரீதியில் இவரே வழிநடத்தியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது