மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு?

இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனிடையே நாக்பூரில் மார்ச் 15ம் திகதி முதல் 21ம் திகதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெப்ரவரி 2ம் வாரத்தில் இருந்து கொரோனா பாதிப்புகள் மாநிலத்தில் கடுமையாக அதிகரித்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகையால், அத்யாவசிய தேவைகளான காய்கறி, பழக்கடைகள், பால் கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் 25% பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணி முதல் வரும் திங்கட்கிழமை காலை 8 மணி வரைக்கு மகாராஷ்டிராவின் ஜல்கோன் மாவட்டத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாக்பூரிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் அச்சமடைய வேண்டாம்.

முககவசம் அணிவதும், மீண்டும் பாதுகாப்பு சமூக இடைவேளி பின்பற்றுவதும் அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *