ஐரோப்பிய நாடுகளில் அதிவேகமாகப் பரவும் புது வகை கொரோனா!

புதிதாக உருவாகி வரும் அதிவேக வகை கொரோனாக்களால், ஐரோப்பிய நாடுகளில் அந்த நோய் பரவல் தீவிரமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இத்தாலியின் மிலான் நகர பள்ளியொன்றில் ஒரு சில நாள்களுக்குள்ளேயே 45 மாணவா்களுக்கும் 14 பள்ளிப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவா்களுக்கு வேகமாகப் பரவி வரும் புதுவகைக் கொரோனாவால் அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

அதேபோல், புலாட் நகரிலும் புதுவகை கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்துக் கூறிய அந்த நகரின் மேயா் பிரான்சிஸ்கோ வாசலோ, கரோனா பரவலைத் தடுப்பதற்காக நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதில் வெற்றி பெற்ாக நினைத்துக் கொண்டாலும், நம்மை விட புத்திசாலித்தனமாக அந்த தீநுண்மி தன்னை தகவமைத்துக்கொள்ளும் என்று நிரூபித்துள்ளது என்றாா்.

பிரிட்டனில் முதல்முதலாக் கண்டறியப்பட்ட அதிவேக கரானாவால் மட்டுமன்றி, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேஸிலில் கண்டறியப்பட்ட கரோனா வகைகளும் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகின்றன.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநா் ஹன்ஸ் குளூக் கூறுகையில், புதுவகை கரோனாக்களால் அந்த நோயின் பரவல் தீவிமடைந்து வருகிறது. அத்துடன், பொது முடக்கங்களைத் தளா்த்துவதும் அந்த நோய் பரவலை அதிகரித்து வருகிறது என்றாா்.

சனிக்கிழமை நிலவரப்படி, ஐரோப்பிய பிராந்தியத்தில் 3,49,18,177 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 8,32,210 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 2,44,99,922 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 95,86,045 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 26,021 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *