கொலையாளி இன்ஸ்பெக்டர் தற்கொலை..!

டாம் வீதியில் பயண பெட்டிக்குள் பெண்ணொருவரின் சடலத்தை வைத்து தலைமறைவான புத்தல பொலிஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரின் உடல் படல்கும்பரை, இறப்பர் தோட்டமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

52 வயதுடைய இவர் 02 பிள்ளைகளின் தந்தையாவார்

குருவிட்ட, தெப்பாகம பகுதி யுவதி ஒருவருடன் காதல் தொடர்பு இவருக்கு இருந்ததாகவும் , நேற்றுமுன்தினம் ஹங்வெல்ல பகுதி ஹோட்டலுக்கு இந்த யுவதியை அழைத்த இவர் அங்கு யுவதியை படுகொலை செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *