நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் இழப்பீட்டு தொகை ரூ.25 இலட்சம் வரை அதிகரிப்பு!

தனியார் பிரிவில் மற்றும் அரை அரசாங்க நிறுவனங்களில் ஊழியர் ஒருவரை குறித்த நிறுவனத்தின் தேவைக்கேற்பட நீக்குவதானால் அவருக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை 25 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தியால் வௌியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இதுவரை செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக காணப்பட்ட 1,250,000 ரூபாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 

குறித்த இழப்பீட்டு தொகை அறவிடுதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *